நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. நாம் இரவு தூங்கி காலையில் எந்திரிக்கும்போது, உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். ரத்த ஓட்டம் உடல் முழுமையாக நூறு சதவீதம் ஓட வேண்டுமானால் அதற்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கியம். ஆக்ஸிஜன் நமது உடலில் எடுத்தால் மட்டுமே ரத்த ஓட்டம் நன்றாக சீராக இருக்கும். அதற்கு ஒரே வழி உடற்பயிற்சி செய்வதே ஆகும். தினமும் ஒரு மணி நேரம் உங்கள் உட்ல ஆரோக்கியத்திற்காக செலவிடுங்கள்.மனம் செம்மையானால் மந்திரம் சொல்ல தேவை இல்லை. மனம் என்பது தனியாக உடலில் எங்கும் தேட முடியாது. உடல் உறுப்பாக இல்லாத ஒரு மாயையே மனமாகும். ஆனால், இந்த மாயை மனம் தான் நம்மை இப்படி ஆட்டி படைக்கிறது.