செங்கம், அக்.10: செங்கம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் செய்ததற்கான தொகையை வாரம் ஒருமுறை வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கம் டவுன் பெருமாள் கோயில் பின்புறம் பால் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இதில், சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் செய்ததற்கான பணம், வாரத்திற்கு ஒருமுறை பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 3 மாதமாக இந்த நடைமுறையினை சங்க செயலாளர் மற்றும் அலுவலர்கள் பின்பற்றாமல் மாதத்திற்கு ஒருமுறை பணப்பட்டுவாடா ெசய்து வருகின்றனர்.