திருவில்லிபுத்தூர், செப். 17: திருவில்லிபுத்தூர் அருகே, திருவண்ணாமலையில் தென் திருப்பதி என அழைக்கப்படும், சீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். விருதுநகர், நெல்லை, மதுரை மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர்.
இந்தாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை செப்.21ல் வருகிறது. இதனையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில், சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை கண்காணிக்க, கோயிலில் 30 இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.