முதியவரை தாக்கியவர்கள் மீது வழக்கு

சிவகாசி, ஏப். 18: திருத்தங்கல் அருகே நடுவப்பட்டியை சேர்ந்தவர் காசி (65). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் கட்டிட தொழிலாளி காசியும், அவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த பூச்சப்பாண்டி (23) என்பவரும் நடுவப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் மது அருந்தியுள்ளனர். அப்போது போதையில் இருந்த இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர் பூச்சப்பாண்டி முதியவர் காசியை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் பூச்சப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதியவரை தாக்கியவர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: