திருச்சுழி, செப். 17: பார்த்திபனூரிலிருந்து நரிக்குடிக்கு இரவு நேரத்தில் அரசு பஸ் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நரிக்குடி பகுதியில் மறையூர், மாயலேரி, புத்தனேந்தல், டி.வேலாங்குடி, ஆண்டியேந்தல், எஸ்.வல்லக்குளம், சேதுராயனேந்தல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பார்த்திபனூர் சென்று வருகின்றனர். மேலும், அங்கிருந்து மதுரை, மானாமதுரை, சிவகங்கை, பரமக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்கள் பணி முடிந்து கிராமங்களுக்கு திரும்ப இரவு நேரங்களில் பஸ் வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.