திருச்சுழி: திருச்சுழி அருகே, ம.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், மருத்துவர்கள் சோபனா, அர்ச்சனா ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 56 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தினர். அப்போது பல வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், ஊழியர்களின் குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப்போட்டி நடைபெற்றன. இதில், கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மருத்துவக்குழுவினர் செய்திருந்தனர்.