கூடலூர் அருகே வீடுகளுக்குள் வெள்ளம்
கூடலூர், ஆக. 8: கூடலூரில் தொடர் கனமழை காரணமாக தேன்வயல், இரு வயல் மற்றும் வேடன் வயல் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அங்குள்ள 20க்கும் மேற்பட்ட ஆதிவாசி குடும்பங்களை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேன்வயல் ஆதிவாசி காலனியில் 17 குடும்பங்கள், இரு வயல் கிராமத்தில் 4 குடும்பங்களை புத்தூர் வயல் மற்றும் தொரப்பள்ளி அரசு பள்ளிகளிலும் தங்க வைத்துள்ளனர். மேலும் முதல் மைல், மங்குழி பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூடலூர் ஆர்.டி.ஓ., ராஜ்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர், தீயனைப்பு துறையினர் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.