டிராக்டரில் மணல் திருடியவர் கைது

புவனகிரி, ஜூன் 18: புவனகிரி சப்-இன்ஸ்பெக்டர் அகோரமூர்த்தி மற்றும் போலீசார் கீழ்புவனகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய அனுமதியும், ஆவணங்களும் இன்றி மணல் திருடப்பட்டு எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து டிராக்டரை கைப்பற்றிய போலீசார் வீரசோழகன் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் (29) என்பவரை கைது செய்தனர். அப்போது டிராக்டரில் இருந்த காட்டுமன்னார்கோவில் வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து முருகவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மணிகண்டனை தேடி வருகின்றனர்.

Related Stories: