காரியாபட்டி, மே 23: காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் ஆவியூர், அரசகுளம், எஸ்.மரைக்குளம், உழக்குடி, பனைக்குடி உட்பட அனைத்து கிராமங்களிலும் இரு போக விவசாயம் செய்வது வழக்கமாக இருந்தது. தற்போது மழை பொய்த்து விவசாயம் செய்வது குறைந்துவிட்ட நலையில் ஒரு சில பகுதிகளில் கோடை உழவு பணிகளை செய்ய விவசாயிகள் துவங்கிவிட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் விவசாயிகள் நிலங்களை புழுதி உழவாக உழுது போட்டுள்ளனர்.