வாணியம்பாடி, மே 21: வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் செவிலியர்கள், உதவியாளர்கள் லஞ்சம் கேட்டு பணம் பெறும் வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் அரசு மருத்துவமனை உள்ளது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் நாள்தோறும் சிகிச்சை பெற வருகின்றனர். பலர் உள்நோயாளிகளாகவும் உள்ளனர். இவ்வாறு சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் அங்கு பணி புரியும் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அசின்தாஜ் என்பவர் நேற்று முன்தினம் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், டிரிப்ஸ் போடும்படி பரிந்துரை செய்தனர். ஆனால், அங்கு பணி புரியும் செவிலியர்கள் டிரிப்ஸ் போட ₹200 தர வேண்டும் என்று கேட்டனர்.