இடைப்பாடி, மார்ச் 15: இடைப்பாடியில் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு ஆலோசனை கூட்டம், சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது.
நகர காங்கிரஸ் தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் நகர துணைத் தலைவர்களாக அண்ணாமலை, வீரப்பன், ரவி, நடராஜன், கோவிந்தசாமி, தங்கவேலு, நகர துணை செயலாளராக நாராயணன், கதிரவன், காமராஜ், ராஜா, நகர பொருளாளராக சுந்தரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் நகர தலைவர் அசோக்குமார் நன்றி கூறினார்.