பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விசியை சேர்ந்த 20 பேர் கைது

பெரம்பலூர், மார்ச் 15: பொள்ளாச்சி இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.  பொள்ளாச்சி இளம்பெண்கள் மீதான பாலியல் சம்பவத்தை கண்டிப்பது, குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி பெரம்பலூர் புது பஸ் நிலையம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் திரளானோர் பங்கேற்றனர். இந்த தகவல் கிடைத்ததும் பெரம்பலூர் டிஎஸ்பி ரவீந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாநில துணை செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் கலையரசன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணக்குமார் உள்ளிட்ட 20 பேரை கைது செய்தனர்.

Related Stories: