அம்மன் கோயில் களரி விழாவில் நடுநிசி சாமி வேட்டை

காளையார்கோவில், மார்ச் 14: காளையார்கோவிலில் வாள்மேல் நடந்த அம்மன் கோவிலில் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டி அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.காளையார்கோவிலில் உள்ள வாள்மேல் நடந்த அம்மன் கோவிலில் மாசி களரி திருவிழாவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி காப்புக்கட்டி மாசி களரி விழா ஆரம்பித்தது. 12ம் தேதி இரவு அம்மனுக்கு அபிஷேகமும் பரிவார தேவதைகளுக்குச் சிறப்பு ஆராதனையும் நடுநிசியில் சாமி வேட்டையாடுதலும் நடைபெற்றது.நேற்று 44க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி கொடுத்து அன்னதானம் நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்

டனர்.

Related Stories: