பொள்ளாச்சியில் பாலியல் பிரச்னை காரைக்குடி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

காரைக்குடி, மார்ச் 14: பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் ரீயில் துன்புறுத்திய நபர்கள் பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களை பாலியல் ரீதியில் சிலர் துன்புறுத்தியுள்ளனர். இவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் அதிகளவில் கல்லூரி மாணவிகளே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் ஆராப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், தூக்கில் போட வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று இதே கோரிக்கை வலியுறுத்தி கல்லூரி வாசலில் அமர்ந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வடக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.

Related Stories: