லாட்டரி, மது விற்ற 5 பேர் கைது

திருப்பூர், மார்ச் 14:  திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட லாட்டரி, மதுபானம் விற்பனை செய்த 5 பேரை கைது செய்து, 70 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.   திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த புதுக்காடு பகுதியை ேசார்ந்த சுரேஷை (30), ரூரல் போலீசார் கைது செய்து, 10 லாட்டரி சீட்டை பறிமுதல் செய்தனர். திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை அருகில், பல்லடம் ரோடு நொச்சிபாளையம், பழவஞ்சம்பாளையம், பள்ளக்காடு ஆகிய பகுதிகளிலுள்ள டாஸ்மாக் கடை அருகே மதுபானம் விற்பனை செய்த கணேசன் (27), பாலமுருகன் (31), ராமமூர்த்தி (32), கிறிஸ்டோபர் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: