ரயில்ேவ மேம்பாலம் கட்டும்பணி கட்டிட இடிபாட்டில் சிக்கி மேற்கு வங்க தொழிலாளி பலி

ஜாலார்பேட்டை, மார்ச் 14:  ஜோலார்பேட்ைட ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்ேவ மேம்பாலம் கட்டும்பணி நடந்து வருகிறது. இதையடுத்து, கடந்த 11ம் தேதி அப்பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்த அஸ்லாம்கான்(59) என்பதும், கடந்த ஒரு மாதமாக இங்கு ஒப்பந்த ஊழியராக கட்டுமான வேலை செய்து வந்தார். மேலும், பணியின்போது இடிபாடுகளில் சிக்கி அஸ்லாம்கான் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: