பேரணாம்பட்டு, மார்ச் 12: பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகம் முன் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணாம்பட்டில் தரக்காடு, குப்பைமேடு பகுதி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தற்போது கோடைக்காலம் துவங்கிவிட்டதால் பேரணாம்பட்டு நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், தரக்காடு, குப்பைமேடு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி பெண்கள் நேற்று பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகம் அருகே குடியாத்தம்- பேரணாம்பட்டு செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.