கோத்தகிரி அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

கோத்தகிரி, பிப். 14:  கோத்தகிரி அருகே உள்ள வள்ளுவர் காலனியில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்து. இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்தன் பேரில் சைல்டுலைன் அமைப்பை சேர்ந்த மதன்குமார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரி செலினா ஆகியோர் வள்ளுவர் காலனிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் சிறுமிக்கு 16 வயது மட்டுமே ஆனது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோரை எச்சரித்த அதிகாரிகள் நடக்க இருந்த சிறுமியின் திருமணத்தை நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.’

Related Stories: