மாவட்ட அளவில் யோகா போட்டி

கரூர், பிப்.14:கரூர்  மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை (இடைநிலை) சார்பில் கரூர் மற்றும்  குளித்தலையில் யோகா ஒலிம்பியார்டு போட்டி நடைபெற்றது.மாவட்ட அளவிலான  போட்டிகளுக்கு தலா 2 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். கரூர் நகர்மன்ற  கோட்டைமேடு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான யோகா ஒலிம்பியார்டு போட்டி  நடைபெற்றது. இதில் 4 பேரும் கலந்துகொண்டு தனூர், மச்சி, அலாசனம் உள்ளிட்ட  20 வகையான ஆசனங்களை செய்து காண்பித்தனர். ஆசனங்களின் நிலை, சகஜ நிலைக்கு  திரும்புதல், உடலை வளைப்பது உள்ளிட்ட நுணுக்கங்களை நடுவர்கள் மற்றும்  உடற்கல்வி ஆசிரியர்கள் சதாசிவம், மருதாம்பாள் ஆய்வு செய்தனர். பில்லூர்அரசு  உயர்நிலைப்பள்ளி மாணவர் தனபால், குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி  மாணவி யாழினி வெற்றி பெற்றனர். இவர்கள் வரும் 15ம்தேதி சென்னையில்  நடைபெற உள்ள மாநில யோகா போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: