குறிஞ்சிப்பாடி, பிப். 14: குறிஞ்சிப்பாடி வட்டம், குள்ளஞ்சாவடி அருகே ராமநாதன்குப்பம் கிராமத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்று திட்டத்தின் கீழ், வேறு பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு சமூகஅறிவியல் பாடம் நடைபெற்றது. கடலூர் முதுநகர் அடுத்த சங்கரந்தோட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், ராமநாதன்குப்பம் பள்ளிக்கு வந்திருந்தனர். இதேபோல், ராமநாதன்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் சங்கரந்தோட்டம் பள்ளிக்கு சென்றிருந்தனர்.