பெண்ணிடம் பணம் பறித்த இருவர் கைது

மொடக்குறிச்சி, பிப்.13: மொடக்குறிச்சி தூரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி துளசிமணி (55) நெசவுத் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மொடக்குறிச்சியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.49 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தனியார் பஸ்சில் சென்றார்.

இதை மறைந்திருந்த கண்காணித்த மூன்று பேரில், ஒருவர் துளசிமணி சென்ற பஸ்சில் சென்றார். மற்ற இருவரும் பைக்கில் சென்றனர். லக்காபுரம் பஸ் ஸ்டாப்பில் துளசிமணி இறங்கியபோது பின்தொடர்ந்து வந்த ஒருவர்,  துளசிமணி வைத்திருந்த ரூ.49 ஆயிரத்தை பறித்துக் கொண்டு ஓடினார்.

அக்கம்பக்கத்தினர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் முத்தம்பாைளயத்தை சேர்ந்த கார்த்திக் (24) எனத் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் நவீன் (26) என தெரியவந்தது.

விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவன் பலி

ஈரோடு, பிப். 13: ஈரோடு மாணிக்கம்பாளையம் மஜித் வீதியை சேர்ந்த சாதிக் பாட்ஷா மகன் காதர் மொய்தீன் (15). இவர், ஈரோட்டில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். காதர் மொய்தீன் கடந்த 3ம் தேதி நண்பர்களுடன் ஈரோடு மரப்பாலம் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது காலில் விஷ பூச்சி கடித்துள்ளது. விளையாடி முடித்து விட்டு வீட்டிற்கு வந்த காதர் மொய்தீனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பெற்றோர் அவரை மருத்துவமனை அழைத்து சென்றும் காய்ச்சல் சரியாகவில்லை. பின்னர், கால் பகுதி முழுவதும் கட்டிபோல் காணப்பட்டது. காதர்மொய்தீனை பெற்றோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார்.

Related Stories: