நஞ்சநாடு, இத்தலாரில் நாளை திமுக., ஊராட்சி சபை கூட்டம் ராசாபங்கேற்கிறார்

ஊட்டி, பிப். 13: நாளை  ஊட்டி திமுக., தெற்கு ஒன்றியத்தின் சார்பில் நடக்கும் ஊராட்சி சபை கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கலந்துக் கொள்கிறார்.

நீலகிரி மாவட்ட திமுக., செயலாளர் முபராக் கூறியிருப்பதாவது: ‘திமுக., தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்ததின் படி, தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டம் நடக்கிறது. இதன்படி கடந்த 9ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை(14ம் தேதி) ஊட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சநாடு பஜார் பகுதியில் ஊராட்சி சபை கூட்டம் நடக்கிறது. இதில், திமுக., கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராசா கலந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு இத்தலார் பஜார் பகுதியில் நடக்கும் ஊராட்சி சபை கூட்டத்திலும், மதியம் 1 மணிக்கு எமரால்டு பஜார் பகுதியில் நடக்கும் ஊராட்சி சபை கூட்டத்திலும் கலந்துக் கொள்கிறார்.

தொடர்ந்து 15ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் ஊட்டி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரையட்டியிலும், பகல் 12 மணிக்கு எபநாடு பகுதியில் நடக்கும் ஊராட்சி சபை கூட்டத்திலும், ராசா கலந்து கொள்ள உள்ளார். இதன் தொடர்ச்சியாக 16ம் தேதி சனிக்கிழமை கீழ்கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெங்குமறஹாடா ஊராட்சி சபை கூட்டம் நிறைவு பெறவுள்ளன.

அந்தந்த ஊராட்சி பகுதிகளிலுள்ள நிர்வாகிகள், பொதுமக்களை இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 இவ்வாறு முபாரக் கூறியுள்ளார்.

Related Stories: