பிரம்மபுரீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா அன்ன, சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதியுலா

பெரம்பலூர், பிப்.13: பெரம்பலூரில் பிரம்மபுரீஸ்வரர் கோயில் தேரோட்டத் திருவிழாவையொட்டி அன்ன, சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதியுலா  நடந்தது.

பெரம்பலூரின் அகிலாண்டேஸ்வரி சமேத  பிரம்மபுரீஸ்வரர் கோயில் தேரோட்ட திருவிழா 5 ஆண்டுகளுக்குப் பிறகு  இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் (ரங்கம்) கல்யாணி, உதவி ஆணையர் (அரியலூர்) தக்கார் முருகையா ஆகியோரது உத்தரவின் பேரில் நடத்தத்  திட்டமிட்டு. கடந்த 8ம்தேதி கோயில் வளாகத்தில் கோயில் செயல் அலுவலர்  மணி தலைமையில் முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

 விழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி 11ம்தேதி நடந்தது. இதற்காக வேத மந்திரங்கள் முழங்க, சிவலிங்கம், நந்தி உருவம் பொறித்த கொடி, கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்து, சுமார் 50 அடி உயர கொடி கம்பத்தில் சுவாமிநாத சிவாச்சாரியார்,  உதவி குருக்கள் கவுரிசங்கர் ஆகியோரால் ஏற்றி வைக்கப்பட்டது.  இதனைத்  தொடர்ந்து, முதல்நாள் அன்ன வாகனத்திலும், நேற்றிரவு சிம்ம வாகனத்திலும்  சுவாமி திருவீதியுலா நடந்தது. இதில் செயல் அலுவலர் மணி, தர்மபரிபாலன  சங்கத்தினர், முன்னாள் அறங் காவலர்கள், முக்கியப் பிரமுகர்கள்,  திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: