சேலம் ரயில்வே ஸ்டேஷனில் 22 பேருக்கு அபராதம்

சேலம், பிப். 13:  சேலம் ரயில்வே கோட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில், பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் தின்பண்டங்களை விற்பனை செய்வோர் மீதும், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரயில்களில் அசுத்தம் செய்வோர் மீதும் ரயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில்,  பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்ததாக 5 பேரும், அனுமதியின்றி வியாபாரம் செய்ததாக  13 பேரும் என்று மொத்தம் 22 பேர் சிக்கினர். இந்த 22 பேரையும் கைது செய்து ரயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ெமாத்தமாக ₹16 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டது.இது போன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Stories: