பெரம்பலூர், பிப்.13: வேப்பூர், நன்னை, கீழப்புலியூர், முருக்கன்குடி ஊராட்சிகளில் உள்ள அரசுக்குச் சொந்தமான தொழில் வளாகங்களை வாடகைக்கு பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர் வருகிற 22ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், நன்னை ஊராட்சியில் 6,617 சதுர அடியில் அமைந்துள்ள 3 கட்டிடங்கள், கீழப்புலியூர் ஊராட்சியில் 3,965 சதுர அடியில் அமைந்துள்ள 3 கட்டிடங்கள், முருக்கன்குடி ஊராட்சியில் 5,907 சதுர அடியில் அமைந்துள்ள 2 கட்டிடங்கள் ஆகியன வாடகை அடிப்படையில் ஆயத்த ஆடைகள் தயாரித்தல் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பது தொடர்பான பிற தொழில் நிறுவனங்களுக்கு தொழில் தொடங்கி, இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் பொருட்டு வாடகைக்கு விடப்பட உள்ளது.