ரூ.9 லட்சத்தில் கலையரங்கம் திறப்பு

பொன்னமராவதி, பிப்.13:    திருமயம் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் கண்டியாநத்தம், தூத்தூர் ஊராட்சி  தீத்தான்பட்டி ஆகிய இரண்டு இடங்களில் தலா ரூ.4.50 லட்சம் மதிப்பில்  கட்டப்பட்டுள்ள இரண்டு கலையரங்கத்தை திருமயம் எம்எல்ஏ ரகுபதி திறந்து வைத்தார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, ஒன்றிய ஆணையர்  அசோக்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி அமைப்பாளர் முரளிதரன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொறியாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Related Stories: