உலக சிக்கன நாள் விழா

கடலூர், பிப். 13: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக சிக்கன நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கடலூர் மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டு சிறுசேமிப்பு வசூலில் மாவட்ட அளவில் அதிக தொகை வசூல் செய்த நிலை முகவர்கள்  மற்றும் மகளிர் முகவர்களுக்கு பரிசுத்தொகைக்கான தேசிய சேமிப்பு பத்திரம் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வழங்கினார். மேலும் உலக சிக்கன நாள் தொடர்பாக மாவட்ட அளவில் நடத்தப்பட்ட   பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு  பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்தோஷினி சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) கோபாலகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் பாபு விநாயகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: