கும்பாபிஷேகம் பார்த்த பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு

மானாமதுரை, பிப். 13: கும்பாபிஷேகம் பார்த்த பெண்ணிடம் 7 பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லியம்மன் சோமநாதர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.மானாமதுரை அருகே தச்சனேந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஜானகி (55) என்பவரும் வந்திருந்தார். கும்பாபிஷேகம் நடக்கும்போது கோபுரங்களை பார்த்துகொண்டிருந்தார். அப்போது அருகில் நின்ற மர்மநபர்கள் ஜானகியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி செயினை கொள்ளையடித்து சென்றனர்.கூட்டத்தில் இருந்த ஜானகி செயினை திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து மானாமதுரை போலீசாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் மானாமதரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: