அரியலூர் தூய லூர்து அன்னை ஆலய திருவிழா

அரியலூர், பிப்.12: அரியலூர் - தூய லூர்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற பெருந்தேர் பவனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

அரியலூர் தூய லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வந்தன. இப்பெருவிழாவில் முக்கிய நாளான நேற்று அலங்கார தேர்பவனி நடைபெற்றது. இதனையடுத்து லூர்து அன்னை பூக்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு பெருந்தேர் பவனி நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தூய லூர்து அன்னை ஆலயத்தை வந்தடைந்தது. தேர் பவனியின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் லூர்து அன்னையின் மகிமை மற்றும் கிறிஸ்தவ பாடல்களை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர்.

Related Stories: