9,434 பயனாளிகளுக்கு பரிசு பெட்டகம்

சிவகங்கை, பிப். 12: அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசுவலை, நாப்கின், கிலுகிலுப்பை, பொம்மை உள்பட 16வகையான பொருட்கள் இதில் உள்ளன.சிவகங்கை மாவட்டத்தில் 2017 -18ம் ஆண்டிற்கு அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொண்ட 9 ஆயிரத்து 434 பெண்களுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: