விதிகளை கடைபிடிக்காததே அதிக விபத்திற்கு காரணம் பள்ளி விழாவில் டிஎஸ்பி பேச்சு

திருப்புத்தூர், பிப். 12: கடந்த ஆறு மாதங்களில் இளைஞர்கள் சாலை விதிகளை கடைபிடிக்காததால் அதிகமான விபத்துக்குள்ளாகி பலர் மரணமடைந்துள்ளனர் என டிஎஸ்பி அண்ணாத்துரை பேசினார்.திருப்புத்தூர் இந்திராகாந்தி பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் விளையாட்டு விழா பள்ளி தாளாளர் ஏகாம்பாள் தலைமையில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சங்கர் வரவேற்றார். காவல்துறை டிஎஸ்பி ,அண்ணாத்துரை சாலை முகாமை துவக்கிவைத்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதங்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது: கடந்த ஆறு மாதங்களில் சாலை விதிகளை கடைபிடிக்காததாலும், மது அருந்திவிட்டு டூவீலர்கள் மற்றும் வாகனங்கள் ஓட்டுவதாலும் அதிகமான விபத்துகள் ஏற்பட்டு பல இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர் என்று பேசினார். முன்னாள் அரசு வழக்கறிஞர் கணேசன், பெற்றோர் சங்க துணைத்தலைவர் மருதுபாண்டியன் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் ஆசிரியை ராமு நன்றி கூறினார்.

Related Stories: