₹2,800 சம்பளத்துக்கு குவிந்த பட்டதாரிகள்

ஊர்க்காவல் படைக்கு கடந்த முறை 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது விண்ணப்பம் வாங்க 500 பேர் மட்டுமே வந்திருந்தனர். ஆனால், இந்தாண்டு 51 பணியிடங்களுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இந்த பணியில் சேர்பவர்களுக்கு மாதத்திற்கு 5 நாள் மட்டுமே வேலை வழங்கப்படும். ஒரு நாளைக்கு ₹560 என 5 நாட்களுக்கு ₹2,800 வழங்கப்படும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும், தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான பட்டதாரி வாலிபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: