பந்தலூர், ஜன.22 : பந்தலூர் அருகே அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் அனுப்பப்பட்ட நோட்டீஸ் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். பந்தலூர் அடுத்த சேரம்பாடியில் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் பலர் விவசாயக்கடன், நகை அடகு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் பெற்றுள்ளனர்.தமிழக-கேரளா எல்லையில் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளதால், இங்கு இரு மாநில ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.