ஒட்டக்கோவிலில் நாளை வருவாய் திட்ட முகாம்

அரியலூர், ஜன. 11: அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் 6வது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில் தலா 2 கிராமங்களில் வருவாய் திட்ட முகாம் நாளை நடக்கிறது. அரியலூர் வட்டத்தில் ஒட்டக்கோவில், ஓரியூர் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் சாத்தம்பாடி, வாணதிரையான்பட்டினம் ஆகிய கிராமங்களிலும் முகாம் நடக்கிறது. இவ்வாறு கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: