காரைக்குடியில் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

காரைக்குடி, டிச. 11: காரைக்குடி ஆலங்குடியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் உணவு வழங்கல் துறை மற்றும் நமது உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுவிநியோக திட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. செயலாளர் கண்ணன் வரவேற்றார். நமது உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். தனிவட்டாசியர் கருணாகரன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் ரேசன்கார்டில் பெயல் சேர்த்தல், நீக்குதல், ரேசன்கடை மாற்றம், புதிய கார்டு வாங்குவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் விக்னேஷ், -ஆசிக், சரவணன், ராமு, கவுதம், பாண்டிச்செல்வி, பாண்டியன், முருகேசன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சட்ட விழிப்புணர்வு பிரிவு செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Related Stories: