பாலிடெக்னிக் மாணவர் மும்பைக்கு கடத்தலா?

சேலம், டிச.7: சேலத்தில் மாயமான பாலிடெக்னிக் மாணவர் மும்பைக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் குமரகிரிப்பேட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரதுமகன் ஸ்ரீசரண்(17). காக்காப்பாளையம் அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 12ம்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதற்கிடையில் பள்ளப்பட்டியை சேர்ந்த சிலருடன் ஸ்ரீசரணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு முறை அக்கும்பலிடம் இருந்து பெற்றோர் மீட்டு வந்துள்ளனர். தற்போதும் அவர் காணாமல் போனதால் பெற்றோர் பள்ளப்பட்டி பகுதிக்கு சென்று தேடினர். ஆனால் அவர் அங்கு இல்லை. எனவே அவர் பெங்களூரு அல்லது மும்பைக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: