இடைப்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

இடைப்பாடி, டிச.7: இடைப்பாடி அரசு ஆண்கள் பள்ளியில், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் கதிரேசன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர் பழனிசாமி, உதவி தலைமை ஆசிரியர் நிர்மலா, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், ஆவனியூர் கூட்டுறவு சங்க தலைவர் செந்தில், நாராயணன், உத்திரராஜ், ஆசிரியர்கள் ராஜமாணிக்கம், சின்னதம்பி, பழனியப்பன், இந்திரஜித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: