ரேஷன் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, டிச.7: சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை(டிச.8) நடக்க உள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை தாலுகா மதகுபட்டி, மானாமதுரை சமத்துவபுரம், இளையான்குடி தாலுகா சாத்தனூர், காரைக்குடி செஞ்சை, தேவகோட்டை தாலுகா பகையனி, திருப்பத்தூர் தாலுகா பிள்ளையார்பட்டி, திருப்புவனம் தாலுகா அல்லிநகரம், காளையார்கோவில் தாலுகா சாத்தரசன்கோட்டை, சிங்கம்புணரி தாலுகா சூரக்குடி ஆகிய இடங்களில் ரேஷன் நுகர்வோர் குறைதீர்கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடக்க உள்ளது.

துணை கலெக்டர் நிலையிலான மண்டல அலுவலர்கள் முன்னிலையில் இக்கூட்டம் நடக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் ரேஷன் கார்டுதாரர்கள் கலந்துகொண்டு ரேஷன் விநியோக திட்டம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: