கோவை வங்கி ஊழியர் காரைக்குடியில் சாவு

காரைக்குடி, டிச.7: கோவை யை சேர்ந்த வங்கி ஊழியர், காரைக்குடியில் தனியார் லாட்ஜில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.கோவை இடையர்பாளையம், சிவாஜி காலனியை சேர்ந்தவர் நாகராஜன்(56). இவர் தஞ்சாவூர் இந்தியன் வங்கியில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காரைக்குடி வங்கி ஆய்விற்காக வந்தவர், கல்லூரி சாலையில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியிருந்தார். நேற்று காலை அவரது மகன் சீனிவாசன் செல்போனில் தொடர்பு கொண்டபோது, நாகராஜன் எடுக்கவில்லை.

 இதுகுறித்து சீனிவாசனுக்கு சந்தேகம் வரவே காரைக்குடி வங்கிக்கு தொடர்புகொண்டு தெரிவித்தார். வங்கி ஊழியர்கள் நாகராஜன் தங்கியிருந்த விடுதி அறையில் சென்று பார்த்தனர். அப்போது, பாத்ரூம் அருகே அவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: