ஊட்டி, டிச. 7: ஊட்டி அருகேயுள்ள புதுமந்து பசுவய்யா நகரில் நகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளியின் சுற்றிலும் தடுப்பு சுவர் உள்ளது. இந்த தடுப்பு சுவரை ஒட்டி ராட்சத கற்பூர மரங்கள் இருந்தன. இந்த மரங்களால் பள்ளி மாணவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதனை அகற்ற வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியதன் பேரில், பள்ளி வளாகத்தை சுற்றிலும் இருந்த ராட்சத மரங்கள் அகற்றப்பட்டன. இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதியடைந்தனர்.