பெரம்பலூரில் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

பெரம்பலூர்,டிச.6: தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெய லலிதாவின் 2ம்ஆண்டு நினைவஞ்சலி நேற்று நாடுமுழுவதும் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பெரம்பலூரில் அதிமுகவினர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்டச்செயலாளரும், குன்னம் சட்டமன்றத்தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் கருப்புச்சட்டையுடன் ஊர்வலமாக பழையபஸ்டாண்டு, காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, ஸ்டேட் வங்கி, வெங்கடேசபுரம், பாலக்கரைவழியாக புதுபஸ்டாண்டு நுழைவுவாயிலில் உள்ள ஜெயலலிதா சிலையருகே வந்துசேர்ந்தனர். அங்குள்ள ஜெயலலிதா சிலைக்கு மாவட் டச் செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு சிலைமுன்பு மலர்அலங்காரத்துடன் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்களைத்தூவி அஞ்சலிசெலுத்தினார். நிகழ்ச்சியில் பெரம்பலூர்  எம்பி மருதராஜா, சிதம்பரம் எம்பி சந்திரகாசி, பெரம்பலூர் எம்எல்ஏ இளம்பைதமிழ்ச்செல்வன்உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Stories: