ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

கடலூர், டிச. 6: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் எம்எல்ஏவும் கடலூர் மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன் அறிவுறுத்தலின் பேரில் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. கடலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பிரகாஷ் தலைமையில் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், வேலன் ஸ்டீல் உரிமையாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பிரகாஷ் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ராமலிங்கம், விஜயகுமார், முன்னாள் கவுன்சிலர் வனிதா சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், தங்கவேல், ராஜபாண்டி, பரமசிவம், செல்வம், வெங்கடேஷ், ரவி, ஆறுமுகம், வழக்கறிஞர் வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: