7 மாதங்களுக்கு முன்பு பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி பெங்களூரில் சுற்றிவளைப்பு

வேலூர், டிச.6:வேலூர் மத்திய சிறையில் இருந்து 7 மாதங்களுக்கு முன்பு பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் பாபாச்சி(43). இவர் கடந்த 2002ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் மத்திகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2008ம் ஆண்டு பாபாச்சிக்கு ஆயுள்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 6 நாட்கள் பரோலில் சொந்த ஊருக்கு சென்றார். பரோல் முடிந்து அவர் மீண்டும் சிறைக்கு திரும்பவில்லை. இதையடுத்து போலீசார் பாபாச்சியை பல இடங்களில் தேடியும் சிக்கவில்லை.

இந்நிலையில், வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் பெங்களூருவில் பதுங்கியிருந்த கைதி பாபாச்சியை நேற்று முன்தினம் அதிரடியாக சுற்றிவளைத்து பிடித்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: