சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் மஞ்சூர் வாலிபருக்கு 11 ஆண்டு சிறை

ஊட்டி, நவ. 30: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட் தீர்ப்பு அளித்தது.

  நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள கிண்ணக்கொரை பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர். இவரது மகன் பிரதாப் (21). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை அருகில் இருந்த புதுருக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மஞ்சூர் போலீசார் மற்றும் ரூரல் மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பிரதாப்பை கைது செய்தனர்..

 இந்த வழக்கு ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன் நேற்று தீர்ப்பளித்தார். இதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் பிரதாப்பிற்கு 10ஆண்டு சிறை தண்டனையும், சிறுமியை மிரட்டிய குற்றத்திற்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

Related Stories: