தீபாவளியில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை

விருதுநகர், நவ.8: விருதுநகர் மாவட்டம் முழுவதும் தீபாவளி தினத்தன்றும் அதற்கு முந்தைய நாளும் சுமார் 9 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

நடந்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ரூ.330 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் முழுவதும் தீபாவளிக்கு முதல்நாள் 6,930 மதுபான பெட்டிகள், 3601 பீர் பெட்டிகள் என ரூ.4 கோடியே 25 லட்சத்து 83 ஆயிரத்து 355க்கு விற்பனை நடந்தது.

தீபாவளியன்று 6739 மதுபான பெட்டிகளும், 6475 பீர் பெட்டிகளும் என ரூ.4 கோடியே 65 லட்சத்து 97 ஆயிரத்து 235க்கு விற்பனையாகியிருக்கிறது. இரண்டு நாட்களில் மொத்தம் சுமார் ரூ.9 கோடி வரை மதுபானங்கள் விற்பனை

நடந்துள்ளது.

Related Stories: