காரியாபட்டி, அக்.8: காரியாபட்டி அருகே ஸ்டாப்பில் பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தி கிராமமக்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரியாபட்டி அருகே ஆவியூர் நான்கு வழிச்சாலையில் ஆவியூர், மாங்குளம், குரண்டி, அரசகுளம், கீழ உப்பிலிக்குண்டு போன்ற பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் வெங்காயம், தக்காளி போன்றவற்றை மதுரைக்கு வியாபாரத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். அதுபோல பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாக ஆவியூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்துதான் பஸ் ஏறி செல்கின்றனர். இந்த ஸ்டாப்பில் நின்று பயணிகளை ஏற்றி சென்ற அரசு, தனியார் பேருந்துகள் கடந்த சில மாதங்களாக நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். இதனால் கிராமமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி செல்வோர் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. நான்கு கி.மீ தூரம் உள்ள டோல்கேட்டுக்கு சென்று அங்கிருந்து பஸ் ஏறி செல்ல வேண்டியுள்ளது. இதையடுத்து கிராமமக்கள் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள் ஆவியூரில் நின்று செல்ல வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.