பைனான்ஸ் நிறுவன மேலாளர் தற்கொலை

சேலம், நவ. 1: சேலத்தில் பைனான்ஸ் நிறுவன மேலாளர்  கடன் தொல்லை காரணமாக விஷம் குடித்து  தற்கொலை செய்து  கொண்டார். சேலம் தென்அழகாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(30). இவருக்கு சீதா என்ன மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். வெங்கடேசன் ஓமலூர் அருகே உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஏரியா மேனேஜராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் டூவீலரில் வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று காலை கருப்பூர் தண்ணீர் தொட்டி அருகே காட்டுப்பகுதியில் வெங்கடேசன் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் கருப்பூர் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் விஷம் குடித்து இறந்திருப்பது தெரியவந்தது.  அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் மீட்டனர். அதில், ‘‘கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தேன். வேலை பளுவும் அதிகமாகி விட்டது. இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். மனைவி சீதா, குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும்,’’ என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: