அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த விவசாயிக்கு வலை

தாரமங்கலம், நவ.1: தாரமங்கலம் அருகே பாப்பம்பாடியில், அரசுக்கு சொந்தமான நஞ்சை, புஞ்சை உள்ளிட்ட தரிசு நிலங்கள் உள்ளது. இதனை வருவாய் துறையினர் ஆய்வு செய்து அரசு நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்தனர். இந்நிலையில், தாரமங்கலம் அருகே கரட்டூர் பகுதியை சேர்ந்த விவசாயி சீரங்கன்(40), அரசு நிலத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை அகற்றி விட்டு விவசாய பணிகளை மேற்கொண்டார். இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சுகவனம்  அளித்த புகாரின் பேரில், தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அரசு நிலத்தை ஆக்கிரமித்தது தெரிய வந்தது. இதை அறிந்த சீரங்கன், திடீரென தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: