மர்ம நபர்கள் கைவரிசை தேசிய அறிவியல் மாநாடு மாணவர்கள் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிப்பு

பெரம்பலூர், நவ.1:   பெரம்பலூர் வெங்கடேசபுரத்திலுள்ள கோல்டன்கேட்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், அறிவியல் இயக்கத்தின் சார்பாக, 26வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. 10க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர். நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். செயலாளர் ராமர் வரவேற்றார். ஒருங்கிணைப் பாளர் முத்துக்குமார் கருத்துரை வழங்கினார். அறிவியல் இயக்கத்தின் கவுரவத் தலைவரான கருணாகரன், கோல்டன்கேட்ஸ் வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் மனோஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பெரம்பலூர், அரியலூர் மாவட்ட வனத்துறை அலுவலர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.

Related Stories: