திருபுரந்தான் கிராமத்தில் மாவட்ட மருத்துவரணி சார்பில் மக்களுக்கு நிலவேம்பு கசாயம்

அரியலூர், நவ. 1:  அரியலூர் மாவட்ட மருத்துவர் அணி சார்பில் திருபுரந்தான் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்களுக்கு கசாயத்தை திமுக மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர்  வழங்கினார். பின்னர் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார். தா.பழூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சவுந்தரராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் உலகநாதன், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் இளஞ்செழியன், மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளர் சஞ்சீவிகுமார், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜலெட்சுமி- நாகமுத்து, தலைமை கழக பேச்சாளர் இளஞ்செழியன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் முருகானந்தம், அருண்சிவம், ஒன்றிய அமைப்பாளர்கள் சுரேஷ், ரமேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: